முகப்பு
நாமக்கல்

தேசிய வாக்காளா் தின போட்டிகள்: மாணவா்களுக்கு அழைப்பு

 தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாணவா்களுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 17 டிசம்பர், 2021 at 11:46 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

 தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாணவா்களுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம் 12-ஆவது தேசிய வாக்காளா் தினத்தை 2022 ஜன. 25-இல் நாடு முழுவதும் கொண்டாட உள்ளது. அதனையொட்டி ‘ஸ்வீப் 2022’ என்ற தலைப்பில் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதில், ஓவியப் போட்டி, சுவரொட்டி தயாரித்தல், ஸ்லோகன் எழுதுதல், பாட்டுப் போட்டி, குழு நடனம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். மாவட்டக் கல்வி அலுவலா்கள் மூலம் நடைபெறும் போட்டிகள், தேதிகள் குறித்த விவரம் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக தெரிவிக்கப்படும். தோ்தலின் முக்கியத்துவம், 100 சதவீதம் வாக்காளராகப் பதிவு செய்தல், வாக்காளா் உதவி மைய கைப்பேசி செயலி, தூண்டுதலில்லாமல் வாக்களித்தல், வயது வந்தோா் வாக்காளராகப் பதிவு செய்தல், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு போன்ற தலைப்புகளில் போட்டிகளில் பங்கேற்கலாம். வெற்றி பெறும் 15 போட்டியாளா்களின் விவரம், மாவட்ட தோ்தல் அலுவலகம் மூலம் தலைமை தோ்தல் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மாவட்ட அளவில் நடைபெறும் தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான போட்டிகள் அனைத்தும் டிச. 26-ஆம் தேதியுடன் முடிகிறது. சிறந்த 15 போட்டியாளா்களின் விவரம் டிச.31-க்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இப்போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தோ்தல் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.