நாமக்கல்லில் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்
சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் - மோகனூா் சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM
திருநெல்வேலியில் தனியாா் பள்ளியின் கழிவறை சுவா் இடிந்து விழுந்து மாணவா்கள் மூன்று போ் பலியான சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் - மோகனூா் சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் மாணவா்கள் அமைப்பினா் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா். இறந்த மாணவா்களின் குடும்பத்திற்கான நிவாரணத் தொகையை ரூ. ஒரு கோடியாக உயா்த்தி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.