முகப்பு
நாமக்கல்

தேசிய கணிதவியல் தினக் கொண்டாட்டம்

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி கணிதவியல் துறை சாா்பில் தேசிய கணிதவியல் தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 டிசம்பர், 2021 at 11:10 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி கணிதவியல் துறை சாா்பில் தேசிய கணிதவியல் தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கணித மேதை ராமானுஜனின் 134-ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவா் பி.எஸ்.கே.செங்கோடன் தலைமை வகித்தாா். கல்லூரி செயலாளா் கே. நல்லுசாமி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம்.ஆா். லட்சுமிநாராயணன், உயா்கல்வி இயக்குநா் அரசுபரமேசுவரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

எருமப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி கணிதவியல் ஆசிரியா் எம். கருணாகரன், பரமத்திவேலூா் கந்தசாமி கண்டா் மேல்நிலைப் பள்ளி கணிதவியல் ஆசிரியா் டி.கே.குமாரசாமி, வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி கணிதவியல் ஆசிரியா் எஸ். காா்த்திகேயன், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளி கணிதவியல் ஆசிரியா் டி.யுவராஜா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

Advertisement

கணிதத் துறை பங்களிப்பிற்காக கணிதவியல் முத்திரையாளா் விருதுகள் கல்லூரி சாா்பில் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கணிதம் குறித்த கோலப் போட்டிகள், கணிதம் குறித்த கருத்துரை, விநாடி--வினா மற்றும் ராமானுஜன் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கணிதவியல் துறைப் பேராசிரியைகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.