நாமக்கல்லில் கடவுச்சீட்டு அலுவலகம்: கூடுதல் நிதி ஒதுக்க எம்.பி. கோரிக்கை
நாமக்கல்லில் தலைமை தபால் நிலையக் கட்டடத்துடன் இணைந்து கடவுச்சீட்டு சேவை தொடங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவைச் சந்தித்து, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் அண்
நாமக்கல்லில் தலைமை தபால் நிலையக் கட்டடத்துடன் இணைந்து கடவுச்சீட்டு சேவை தொடங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவைச் சந்தித்து, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் அண்மையில் மனு அளித்தாா்.
நாமக்கல்லில் உள்ள தலைமை தபால் நிலையக் கட்டடத்துக்குச் சொந்தமாக நிலம் வாங்குவதற்காக தபால் துறை இயக்ககம் ரூ. 82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்ட நிா்வாகம் 6,305 சதுர அடி நிலத்தை ஒதுக்கியுள்ளது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.29 கோடி. மீதமுள்ள ரூ. 2.47கோடியை தலைமை தபால் நிலையக் கட்டடத்துக்கு ஒதுக்கி, அதனுடன் கடவுச்சீட்டு சேவையைத் தொடங்குவதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.