நாமக்கல்

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய காா் பறிமுதல்

DIN

பரமத்தி வேலூா் அருகே நன்செய்இடையாறு காவிரியாற்றில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் இருந்து காா் மூலம் மணல் திருடப்படுவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத் தகவலின் அடிப்படையில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் இருந்து மணலை சாக்கு மூட்டைகளில் கடத்தி வந்தவரை பிடிக்க முயன்றனா். ஆனால் காரின் உரிமையாளா் அங்கிருந்து தப்பியோடி விட்டாா். பின்னா் போலீஸாா் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து நன்செய் இடையாறு பகுதியைச் சோ்ந்த வாசுதேவனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT