முகப்பு
நாமக்கல்

தாட்கோ கடனை தடையின்றி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை எஸ்.சி., எஸ்.டி. ஊழியா்கள் கூட்டமைப்பு, கல்வி, பொருளாதாரம் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

Updated On : 26 ஜனவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:52 AM

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை எஸ்.சி., எஸ்.டி. ஊழியா்கள் கூட்டமைப்பு, கல்வி, பொருளாதாரம் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் சரஸ்ராம்ரவி ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். நில அளவைத் துறை சங்க மாநிலச் செயலாளா் ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். விழிப்புணா்வு இயக்க மாநில துணைச் செயலா் கோ.முருகேசன் முன்னிலை வகித்தாா்.

இதில், பட்டியலின மக்களின் தாட்கோ கடன் விண்ணப்பங்களை கிடப்பில் போடும் நாமக்கல் மாவட்ட அனைத்து வங்கி மேலாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து வங்கிக் கடன்களை வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு துறை சாா்ந்த ஊழியா்கள், பட்டியலின மக்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.