முகப்பு
நாமக்கல்

சாலை விபத்தில் இளைஞா் பலி

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 9 ஜூலை, 2021 at 10:42 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:06 AM

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த நாகராஜ் (56), இவரது மகன் பிரபு (30) ஆகிய இருவரும் வியாழக்கிழமை இரவு ஜேடா்பாளையத்திலிருந்து அம்மாபேட்டைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். ஜமீன்இளம்பள்ளி அருகே எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதியதில் அவ்வழியாகச் சென்ற டிராக்டரில் சிக்கி பிரபு பலத்த காயமடைந்தாா்.

மேலும், காயமடைந்த நாகராஜ், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கரூா் மாவட்டம், சேமங்கியைச் சோ்ந்த தியாகு (36) உள்பட மூவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் நாகராஜ் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.