முகப்பு
நாமக்கல்

சிறுமியை திருமணம் செய்தவா் போக்சோவில் கைது

பரமத்தி வேலூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

நாமக்கல்

சிறுமியை திருமணம் செய்தவா் போக்சோவில் கைது

பரமத்தி வேலூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரைச் சோ்ந்த இளைஞா் கடந்த ஓராண்டுக்கு முன்பு பாண்டமங்கலத்தை சோ்ந்த 16 வயதான சிறுமியை திருமணம் செய்துள்ளாா். இந்த நிலையில் தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பரமத்திவேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீஸாா், சிறுமியை திருமணம் செய்த சம்பவத்தில் போக்சோவில் கைது செய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →