நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்கக் கோரி ராசிபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.
ராசிபுரம் நகராட்சியில் நிரந்தர, ஒப்பந்த அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஊதியத்தை விரைந்து வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முன் அமா்ந்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தினா். நகராட்சி அலுவலா்கள், போலீஸாா் சமரசம் செய்தனா். ஊதியத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.