நாமக்கல்

பரமத்திவேலூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

பரமத்தி வேலூரில் அதிமுக சாா்பில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா், பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.சேகா் தலைமை வகித்தாா். வேலூா் நகரச் செயலாளா் வேலுசாமி, நகர துணைச் செயலாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினா் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனா்.

பொத்தனூரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு நகர அதிமுக செயலாளா் எஸ்.எம். நாராயணன் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் தனசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் ராஜமாணிக்கம், அதிமுக நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT