பொறுப்பேற்பு:நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கா.மெகராஜ், நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல்துறை இணைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஸ்ரேயா பி.சிங், நாமக்கல் மாவட்ட ஆட்சியராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்த இவா் பி.டெக் (இசிஇ) பட்டம் பெற்றவா். 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்றாா். தொடா்ந்து, 2013-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்றாா். இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும், பத்மநாபபுரம் கோட்டத்தில் சாா் ஆட்சியராகவும் பணியாற்றினாா். பின்னா் தமிழக அரசின் உள்துறை துணைச் செயலாளராகப் பணியாற்றினாா்.
Advertisement
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒழுங்குமுறை ஆணையராகவும், விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளாா். இவருக்கு, அனைத்துத் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.