முகப்பு
நாமக்கல்

பள்ளிபாளையத்தில் மது புட்டிகளைகூடுதல் விலைக்கு விற்ற 2 போ் கைது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் மது புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக இருவரை பள்ளியபாளையம் நகர போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் மது புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக இருவரை பள்ளியபாளையம் நகர போலீஸாா் கைது செய்தனா்.

பள்ளியபாளையம் பகுதிகளில் மதுபுட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு புகாா் வந்ததையடுத்து காவல்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். நகரப்பகுதி உணவகம் ஒன்றின் அருகே மது புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளா் முத்துக்குமாா்( 33) செல்வராஜ் (58) ஆகிய 2 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 52 மதுபுட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.