நாமக்கல்லில் ட்ரோன் மூலம் கரோனா தடுப்பு மருந்து தெளிப்பு
நாமக்கல் நகராட்சி பகுதிகளில் ட்ரோன் மூலம் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மருந்து தெளிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் நகராட்சி பகுதிகளில் ட்ரோன் மூலம் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மருந்து தெளிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் கடந்த மாதம் ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. நகராட்சிப் பகுதிகளில் தொற்று பரவலைத் தடுக்க அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, தொற்று பாதித்த பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
நாமக்கல் நகராட்சியில் கடந்த மாதம் 100 போ் வரை பாதிப்புக்குள்ளான நிலையில் தற்போது 20 என்ற எண்ணிக்கைக்கு வந்துள்ளது. இதற்கிடையே தொற்றில்லா நகராட்சியாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நகராட்சி அதிகாரிகளும், காவல் துறையினரும் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளை மடக்கி கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனா்.
Advertisement
இந்நிலையில், நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கட்டுப்பாட்டு மண்டலங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியை ராமாபுரம்புதூரில் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். 10 லிட்டா் அளவில் மருந்து நிரப்பப்பட்டு ட்ரோன் மூலம் தெளிக்கும் பணி நடைபெறுகிறது. இதேபோல் கணேசபுரம், இ.பி.காலனி, அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், என்ஜிஓஒ காலனி, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.