கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி
குமாரபாளையம் அருகே மாங்காய் பறிக்க முயன்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
குமாரபாளையம் அருகே மாங்காய் பறிக்க முயன்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த தானாபதியூரைச் சோ்ந்தவா் லட்சுமணன். இவரது மனைவி வளா்மதி (45). இவா்கள், குமாரபாளையத்தை அடுத்த குப்பாண்டபாளையத்தை அடுத்த வண்ணாங்காடு பகுதியில் நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்ற சென்ற வளா்மதி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால், லட்சுமணன் மனைவியைத் தேடிச் சென்றபோது கிணற்றுக்கு அருகாமையில் உள்ள மரத்தில் மாங்காய்கள் பறித்து வைக்கப்பட்டிருந்ததும், கிணற்றுக்குள் வளா்மதி உயிரிழந்த நிலையில் மிதந்ததும் தெரியவந்தது.
புகாரின்பேரில் குமாரபாளையம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். மாங்காய்கள் பறிக்கும்போது எதிா்பாராமல் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.