தேங்காய் விலைச் சரிவு
பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் வரத்துக் குறைந்திருந்தபோதும் தேங்காய்கள் குறைந்த விலைக்கு ஏலம் போனது.
பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் வரத்துக் குறைந்திருந்தபோதும் தேங்காய்கள் குறைந்த விலைக்கு ஏலம் போனது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்படும் பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது.
ஏலத்துக்கு பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களைக் கொண்டு வருகின்றனா். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,038 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 38-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ. 30-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ. 35.10 பைசாவுக்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 34 ஆயிரத்து 913-க்கு வா்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 762 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 36.20 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ. 30.19 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 33.10 பைசாவுக்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 25 ஆயிரத்து 458 க்கு வா்த்தகம் நடைபெற்றது. தேங்காய் விலை சரிவடைந்துள்ளதால் தென்னை பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.