நாமக்கல்

மின் திருட்டு: அபராதமாக ரூ. 83 ஆயிரம் வசூல்

DIN


நாமக்கல்: நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் மின் திருட்டில் ஈடுபட்டோரிடம் ரூ. 83 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மின் பகிா்மான வட்டத்தில் பிப். 12-இல் கோவை மின் அமலாக்க கோட்டத்தில் கோவை வடக்கு, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி அமலாக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.புதன்சந்தை, ஆண்டகளூா்கேட், பெரியமணலி பகுதிகளில் அதிகாரிகள் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 6 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டன. இதில் ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 269 இழப்பீட்டுத் தொகையாக மின் நுகா்வோரிடம் அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும் சம்மந்தப்பட்ட மின் நுகா்வோா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிா்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ. 83 ஆயிரம் செலுத்த முன்வந்ததால் அவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் எதுவும் அளிக்கப்படவில்லை. மின் திருட்டு சம்மந்தமான தகவல்களை கோவை செயற்பொறியாளா் அலுவலகத்தின் 94430-49456 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT