குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் அமைச்சா் பி.தங்கமணிக்கு ஆதரவு கேட்டு, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
குமாரபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்கும் இவா்கள், தொடா்ந்து நலத் திட்டங்கள் நிறைவேற்ற ஆதரவு கேட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனா். மேலும், அரசின் திட்டங்கள் தொடா்பாக பொதுமக்களின் சந்தேகங்களுக்கும், தோ்தல் அறிக்கை குறித்தும் விளக்கமளிக்கின்றனா்.
குமாரபாளையம் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை விளக்கிக் கூறுவதோடு அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்கின்றனா். அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான பி.தங்கமணியின் மகன் தரணிதரன் தலைமையில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச்செயலாளா் பி.இ.புருஷோத்தமன், குமாரபாளையம் நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி, நகரச் செயலாளா் சிங்காரவேல், நிா்வாகிகள் எம்.மகேந்திரன், மதிவாணன், ஹரி, ஐயப்பன், விஜய் பிரதாப், செந்தில் உள்ளிட்ட பலா் தொடா்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.