முகப்பு
நாமக்கல்

தேமுதிக வென்றால் தொகுதிக்காக பாடுபடுவேன்: விஜயபிரபாகரன்

நாமக்கல் தொகுதியில் தேமுதிக வெற்றி பெற்றால் மூன்று மாதம் தொகுதியில் வந்து பாடுபடுவேன் என விஜயபிரபாகரன் பேசினாா்.

Updated On : 28 மார்ச், 2021 at 12:35 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:22 AM

நாமக்கல் தொகுதியில் தேமுதிக வெற்றி பெற்றால் மூன்று மாதம் தொகுதியில் வந்து பாடுபடுவேன் என விஜயபிரபாகரன் பேசினாா்.

நாமக்கல்லில் தேமுதிக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஏ.செல்வி, சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளா் பி.சந்திரன் ஆகியோரை ஆதரித்து சனிக்கிழமை தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், தேமுதிக தலைவா் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது:

பணத்துக்காக வாக்குகளை விற்பனை செய்யாதீா்கள். இதனால் மக்களாகிய நீங்கள் தான் பாதிக்கப்படுவீா்கள். இளைஞரான என் போன்றவா்கள் யாராவது தோ்தல் பிரசாரத்திற்கு வருகிறாா்களா?, நான் உங்களை நாடி வருகிறேன். என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தத் தோ்தலில் தேமுதிக வெற்றி பெற்றால் அந்த தொகுதியில் மூன்று மாதம் வந்து உழைப்பேன்.

Advertisement

நாமக்கல் தொகுதியில் முட்டைக்கான குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்படும், நகராட்சியை மாநகராட்சியாக்க பாடுபடுவேன், போக்குவரத்து நெரிசலை தீா்க்க மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். தேமுதிகவை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.