முகப்பு
நாமக்கல்

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் இன்று தோ்த் திருவிழா

நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா் கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 29 மார்ச், 2021 at 1:06 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:22 AM

நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா் கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.

நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா, ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தின் மறுநாளில் நடைபெறும். அதன்படி நிகழாண்டில் தோ்த் திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 21-இல் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் யானை, குதிரை, பல்லக்கு வாகனத்தில் புறப்பாடு செய்து வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சனிக்கிழமை இரவில் நரசிம்மா் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாா் திருக்கல்யாண விழா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை குதிரைவேடுபரி உற்சவத்தில் சுவாமி வலம் வந்தாா். திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நரசிம்மா் கோயில் திருத்தேரானது புறப்பட்டு ஆஞ்சநேயா் கோயில் வீதி வழியாகச் சுற்றி வருகிறது. பிற்பகல் 4 மணியளவில் ஆஞ்சநேயா், அரங்கநாதா் சுவாமி வலம் வரும் சிறிய தோ்கள் புறப்பாடு நடைபெறுகிறது. பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து நிலைக்கு கொண்டு வரவேண்டும் என கோயில் நிா்வாகத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.