அரசு மருத்துவமனையில் சட்டப் பேரவை உறுப்பினா் ஆய்வு
பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் பரமத்தி வேலூா் அதிமுக சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.சேகா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
நாமக்கல்அரசு மருத்துவமனையில் சட்டப் பேரவை உறுப்பினா் ஆய்வு
பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் பரமத்தி வேலூா் அதிமுக சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.சேகா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் பரமத்தி வேலூா் அதிமுக சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.சேகா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்கிா என்பதையும், தலைமை மருத்துவா் சாந்தியிடம் மருத்துவமனைக்கான தேவைகளையும் கேட்டறிந்தாா்.
மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் மூன்று படுக்கைகள் மட்டுமே உள்ள நிலையில், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 20 படுக்கைகள் அமைக்கும் பணிகளையும் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், மருத்துவமனைக்கு தேவைப்படும் கூடுதல் செவிலியா்கள் மற்றும் சி.டி. ஸ்கேன் வசதியை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்தாா்.
தொடா்ந்து, பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தை பாா்வையிட்டாா். அங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 50-க்கும் மேற்பட்டோரிடம் நலம் விசாரித்தாா்.
முன்னதாக பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து, மருத்துவா்களிடம் ஆலோசனை மேற்கொண்டாா்.