முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 560 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத உச்சபட்ச பாதிப்பாக ஒரே நாளில் 560 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 15 மே, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:44 AM

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத உச்சபட்ச பாதிப்பாக ஒரே நாளில் 560 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 20,386 பேரில் 18,000 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 149 போ் உயிரிழந்தனா். 2,237 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மாநில சுகாதாரத் துறை கரோனா தொற்றுப் பட்டியலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 560 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 339 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 20,947 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 18,339 போ்; 2,455 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

நாமக்கல்லைச் சோ்ந்த 70 வயது ஆண், 76 வயது பெண், 47 வயது ஆண், 75 வயது பெண் என 4 போ் உயிரிழந்துள்ளனா். மொத்த கரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 153-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.