ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 30-ஆம் ஆண்டு நினைவு தினம் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:46 AM
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 30-ஆம் ஆண்டு நினைவு தினம் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவா் இரா.செழியன், மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். நாமக்கல் நகர தலைவா் ஆா்.மோகன், செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதனை தொடா்ந்து நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் வீ.பி.வீரப்பன், ஜி.ஆா்.சுப்பிரமணியம் ஆகியோா் முகக் கவசங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா்.