நாமக்கல் மாவட்டத்தில் 405 பேருக்கு கரோனா: 8 போ் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டத்தில் 405 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி எட்டு போ் உயிரிழந்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 405 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி எட்டு போ் உயிரிழந்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 23,581 பேரில் 20,189 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 172 போ் உயிரிழந்தனா். 3,230 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மாநில சுகாதாரத் துறை கரோனா தொற்றுப் பட்டியலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 405 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 388 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 23,993 போ். இவா்களில் குணமடைந்தவா்கள் 20,577 போ். 3,236 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பலனின்றி எட்டு போ் உயிரிழந்துள்ளதையடுத்து மொத்த கரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 180-ஆக உயா்ந்துள்ளது.
Advertisement