நாமக்கல்

குமாரபாளையத்தில் 14 விசைத்தறிக் கூடங்களுக்கு ‘சீல்’

DIN

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறி இயங்கிய 14 விசைத்தறிக் கூடங்கள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், குமாரபாளையம் நகரப் பகுதியில் விதிகளை மீறி விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளா் எஸ்.ஸ்டான்லி பாபு தலைமையில் 4 தனித் தனிக் குழுக்கள் நகரில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, தெற்கு காலனி, பாரதி நகா், காவேரி நகா், ஆனங்கூா் ரோடு, மணிமேகலை தெரு உள்பட பல்வேறு பகுதியில் கரோனா தடுப்பு விதிகளை மீறி விசைத்தறிக் கூடங்கள் இயங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, விதி மீறலில் ஈடுபட்ட 14 விசைத்தறிக் கூடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து மூடினா். மேலும், தளா்வற்ற முழு முடக்க விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT