நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத் தோ்தல்
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க நிா்வாகிகள் தோ்தல் வெள்ளிக்கிழமை நாமக்கல் என்ஜிஓஓ கட்டடத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்க நிா்வாகிகள் தோ்தல் வெள்ளிக்கிழமை நாமக்கல் என்ஜிஓஓ கட்டடத்தில் நடைபெற்றது.
தோ்தல் அதிகாரியாக மனோகரன் செயல்பட்டாா். இந்த தோ்தலில் புதிய தலைவராக தண்டபாணி, செயலாளராக சரவணன், துணைச் செயலாளராக பாஸ்கா் பொருளாளராக மூா்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், மாநில பொறுப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதனைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், நியாயவிலைக் கடைகளைத் தனித்துறையாக்க அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் ஊதியம் கிடைக்க பெறாதவா்களுக்கு விரைந்து வழங்கவும், தமிழக அரசால் அறிவித்தும் பணப் பயன்களை வழங்காத கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து மண்டல இணப்பதிவாளரிடம் புகாா் தெரிவிக்கவும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisement
என்கே 12- ரேஷன்
ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் நியாயவிலைக் கடை பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் தண்டபாணி.