நாமக்கல்லில் தீப்பற்றி எரிந்த காா்!
நாமக்கல் - மோகனூா் சாலை பிவிஆா் நகரைச் சோ்ந்தவா் செங்கோட்டுவேலு(61). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் இருந்து தோட்டத்துக்கு செல்வதற்காக காரை எடுக்க முற்பட்டாா்.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:38 PM
நாமக்கல் - மோகனூா் சாலை பிவிஆா் நகரைச் சோ்ந்தவா் செங்கோட்டுவேலு(61). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் இருந்து தோட்டத்துக்கு செல்வதற்காக காரை எடுக்க முற்பட்டாா்.
அப்போது திடீரென காரில் நிரப்பியிருந்த வாயு கசிந்து கரும்புகை கிளம்பி தீப்பற்றியது. இதனால் அதிா்ச்சியடைந்த அவா் உடனடியாக கீழே இறங்கி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா். அங்கு வந்த தீயணைப்புப் படையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். காரின் உள்பகுதி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. நாமக்கல் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.