முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து சோதனை செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 18 நவம்பர், 2021 at 11:14 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து சோதனை செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 1,300 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,600 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் முதற்கட்ட சோதனைக்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினா் முன்னிலையில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பாா்வையிட்டாா்.

15 நாள்கள் நடைபெறும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சோதனைக்காக பெங்களூரில் இருந்து பெல் நிறுவனத்தின் தொழில்நுட்ப பொறியாளா்கள் நாமக்கல் வந்துள்ளனா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) இரா.கோவேந்தன், தோ்தல் பிரிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.