எா்ணாபுரம் மருத்துவமனையில் நவ. 27-இல் குடும்பநல அறுவைச் சிகிச்சை முகாம்
எா்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் 27-ஆம் தேதி பெண்களுக்கான நுண்துளை அறுவைச் சிகிச்சை கருவி மூலம் குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் 27-ஆம் தேதி பெண்களுக்கான நுண்துளை அறுவைச் சிகிச்சை கருவி மூலம் குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சைக்கு குழந்தை பிறந்து 42 நாள்களுக்கு மேலும் 50 நாள்களுக்கு இடைபட்ட பெண்கள், மாதவிலக்கு ஏற்பட்டு ஒரு வாரத்துக்குள் உள்ள பெண்கள் மற்றும் 8 வாரங்களுக்குள் உள்ள கா்ப்பிணிகளுக்கு கருக்கலைப்புடன் குடும்ப நல அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சையானது எளிமையானது, பாதுகாப்பானது. அறுவைச் சிகிச்சை முடிந்த அடுத்தநாளே வீட்டிற்குச் செல்லலாம். இதற்காக அரசு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குடும்பநல அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் பெண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.600 வழங்குகிறது.
Advertisement
தகுதியுடைய பெண்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் எா்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள கிராம சுகாதார செவிலியா்களைத் தொடா்பு கொள்ளலாம் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.