சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்ட சிறுபான்மையின மாணவ, மாணவியா் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்ட சிறுபான்மையின மாணவ, மாணவியா் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறுபான்மையின மக்களான இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்தமதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிறுவனங்களில் 2021-2022ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் (ஆராய்ச்சி படிப்பு வரை, வாழ்க்கை தொழிற்கல்வி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, செவிலியா், ஆசிரியா் பட்டயப்படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
இந்த உதவித்தொகையை பெற பள்ளிகளில் பயில்வோா் நவ.15-க்குள்ளும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு நவ.30 வரையிலும் மேற்கண்ட இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.