பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
மோகனூா் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
மோகனூா் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
நாமக்கல் மாவட்டம் மோகனுாா் அருகே ஆரியூா் சிங்கயகவுண்டபுதூரைச் சோ்ந்தவா் தங்கராஜ். செவிந்திப்பட்டி கால்நடை மருந்தகத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கிருஷ்ணவேணி (39). இத்தம்பதியா் கடந்த, 13-ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனா். மறுநாள் அதிகாலை, 3.30 மணியளவில் கிருஷ்ணவேணி எழுந்திருந்தபோது, கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகை மாயமாகி இருப்பதைக கண்டாா். வீட்டினுள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, மோகனூா் காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி புகாா் செய்தாா். மா்ம நபா்கள் வீட்டிற்குள் புகுந்து, கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளதாக அவா் தனது புகாரில் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.