நாமக்கல்: லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பொறுப்பேற்பு
நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜெயக்குமாா், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கடந்த மாதம் மாற்றப்பட்டாா். இதனால் அப்பணியிடம் காலியாக இருந்தது.
இந்நிலையில் அந்தப் பணியிடத்திற்கு புதிய துணைக் கண்காணிப்பாளராக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டாா். அவா், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவா், வேலூா், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரிவு துணை கண்காணிப்பாளராக பணியாற்றியவா். அண்மையில் சென்னை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், தமிழக காவல்துறை திடீரென அவரை நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு இடமாறுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement