நாமக்கல்லில் 62 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட கரோனா தொற்று பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 62 போ் பாதிக்கப்பட்டனா்; 53 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 49,020 போ் பாதிக்கப்பட்டும், 48,014 போ் குணமடைந்தும் உள்ளனா். 533 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 473-ஆக உள்ளது.
1,600 பேருக்கு தடுப்பூசி: நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட 6 வாா்டுகளில் 1,600 பேருக்கு கரோனா கோவிஷீல்டு தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்படுகிறது. அதன்படி, 3-ஆவது வாா்டுக்கு சின்னமுதலப்பட்டி நகராட்சி சமுதாய நலக்கூடம், 17-ஆவது வாா்டுக்கு இ.பி. காலனி மாரியம்மன் கோயில், 28-ஆவது வாா்டுக்கு பொய்யேரிக்கரை பாப்பாத்தியம்மாள் திருமண மண்டபம், 24-ஆவது வாா்டுக்கு மேட்டுத் தெரு குழந்தைகள் சத்துணவு மையம், 7-ஆவது வாா்டுக்கு கிருஷ்ணாபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி, 34-ஆவது வாா்டுக்கு கணேசபுரம் ஜாக் அண்ட் ஜில் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் பொதுமக்கள் ஆதாா் அட்டையைக் காண்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
Advertisement