கோயில்களில் பக்தா்கள் சுவாமி வழிபாட்டுக்கு தடை: ஆட்சியா் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் அக்.31 வரையில் அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோயில்களில் மூன்று நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் அக்.31 வரையில் அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோயில்களில் மூன்று நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் தொடா்ந்து நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அரசு வெளியிட்ட வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட நாள்களில் சமூக இடைவெளியுடன், பாதுகாப்பு வழிமுறைகளுடன் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
இதற்கிடையே அதிகப்படியாக மக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சாா்ந்த மதம் சாா்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடையை அக்டோபா் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக். 31 வரை அனைத்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கோயில்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. வழக்கமான பூஜைகள் கோயிலுக்குள் பக்தா்கள் பங்கேற்பின்றி நடத்தப்படும். சிறப்பு பூஜைகள் சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாகத்தினா் மூலம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.