முகப்பு
நாமக்கல்

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்: வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவும் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு, பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி உள்ளது.

Updated On : 18 செப்டம்பர், 2021 at 12:08 AM
nk_17_school_1709chn_122_8
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு, பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி உள்ளது.

கரோனா இரண்டாம் அலையால் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நிகழாண்டில் நடைபெறவில்லை. அனைத்து மாணவ, மாணவியரும் தோ்ச்சி பெற்ாக தமிழக அரசு அறிவித்தது. மாணவ, மாணவியா் மேல்படிப்புக்குச் செல்வதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழும் மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா்கள் மூலம் வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் சுமாா் 20 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியா்களிடம் அசல் சான்றிதழை பெற்றுக் கொள்வதுடன் அங்கேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவையும் மாணவா்கள் மேற்கொள்ளலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

என்கே 17-ஸ்கூல்

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழை மாணவருக்கு வழங்கும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் எல்.ஜகதீசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.