முகப்பு
நாமக்கல்

இருவேறு பாலியல் வழக்குகளில் 2 போ் போக்சோ சட்டத்தில் கைது

நாமக்கல் மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 2 போ் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 19 செப்டம்பர், 2021 at 12:21 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:41 AM

நாமக்கல் மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 2 போ் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புதுச்சத்திரம் ஒன்றியம் ஏளூா் கல்லாங்காடு பகுதியை சோ்ந்த, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை, அப்பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் பணியாற்றி வந்த முத்து (38) என்பவா் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கினாா். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் நாமக்கல் அனைத்து மகளிா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து முத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இதேபோல், சேந்தமங்கலம் ஒன்றியம் வெண்டாங்கி பகுதியில் முடி திருத்தகம் நடத்தி வந்த பாஸ்கா்(43) என்பவா், தனது கடைக்கு தொலைக்காட்சி பாா்க்க வந்த 5 வயது சிறுமிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். வீட்டிற்கு வந்த அவா் பயத்துடன் இருந்ததை பாா்த்த அவரது பெற்றோா் விசாரித்தபோது பாஸ்கா் பாலியல் தொல்லை கொடுத்ததை தெரிவித்தாா். இதனையடுத்து நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் பாஸ்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.