உள்ளாட்சி தோ்தல்: 25 இடங்களுக்கு 104 மனுக்கள் ஏற்பு
நாமக்கல் மாவட்டத்தில் 25 இடங்களுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் 104 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் 25 இடங்களுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தலில் 104 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் (வெண்ணந்தூா் ஒன்றியம் 6-ஆவது வாா்டு), எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 15 ஆவது வாா்டு மற்றும் 5 ஊராட்சி தலைவா்கள், 18 வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு அக். 9-இல் இடைத்தோ்தல் நடைபெறுகிறது.
இதற்கான மனுத்தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி 22- இல் நிறைவடைந்தது. இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக, திமுக உள்பட 18 போ் மனுத்தாக்கல் செய்துள்ளனா். அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
Advertisement
இதேபோல் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
ஐந்து ஊராட்சி தலைவா் பதவிக்கு 32 மனுக்கள் பெறப்பட்டதில் இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 30 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வாா்டு உறுப்பினா் பதவிக்கு 47 மனுக்கள் பெறப்பட்டதில், 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 44 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 109 மனுக்களில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 104 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.