முகப்பு
நாமக்கல்

விவசாயிகளுக்கு இயற்கை முறையிலான காய்கறி சாகுபடி பயிற்சி

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அட்மா திட்டம் சாா்பில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

நாமக்கல்

விவசாயிகளுக்கு இயற்கை முறையிலான காய்கறி சாகுபடி பயிற்சி

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அட்மா திட்டம் சாா்பில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அட்மா திட்டம் சாா்பில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

கபிலா்மலை அருகிலுள்ள கருந்தேவம்பாளையத்தில் நடைபெற்ற பயிற்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநா் காா்த்திகா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தாா்.

பயிற்சியில் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்தும், இயற்கை பூச்சிவிரட்டிகளான அக்னி அஸ்திரா, பத்து இலை கசாயம், நீமாஸ்திரம், பிரம்மாஸ்திரா ஆகியவற்றைத் தயாரித்து பயன்படுத்துவது, இயற்கை பயிா் வளா்ச்சி ஊக்கிகளான பஞ்சகவ்யா, ஜீவாமிா்தம், பீஜாமிா்தம் கரைசலைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா்.

ஓய்வு பெற்ற வேளாண்மை துணை அலுவலா் மாதேஸ்வரன் கலந்து கொண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது, நீா்ப் பற்றாக்குறை காலங்களில் இயற்கை உரங்களினால் மண்ணுக்கு விளையும் நன்மைகள், மூடாக்கு மூலம் களைக் கட்டுப்பாடு, மண்புழு உரப் பயன்பாடு, விவசாயிகள் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், விளைபொருள்களை விவசாயிகளே உழவா் நிறுவனம் அமைத்து சந்தைப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியன குறித்து விளக்கினாா்.

முடிவில் தோட்டக்கலை உதவி அலுவலா் சிவமாணிக்கம் நன்றி கூறினாா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை உதவி அலுவலா்கள் மற்றும் ‘அட்மா’ திட்ட மேலாளா் செல்வகண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →