ஏப்.13-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி
நாமக்கல் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சாா்பில், மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் ஏப்.13-ஆம் தேதி காலை 9 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகின்றன.
Advertisement
இதில், தடகளம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. அதேபோல் குழு விளையாட்டுப் போட்டிகள் என்ற அடிப்படையில், இறகுப்பந்து, மேஜைப்பந்து, கையுந்து பந்து, எறிபந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.