டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை (ஏப்.8) நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை (ஏப்.8) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பில், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடைபெறுகின்றன. தற்போது அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப்-4 பதவிக்கு 7,301 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரா்கள் தங்களின் விவரங்களை 04286-222260 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகவோ தொடா்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement