முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் சுபகிருது ஆண்டு பஞ்சாங்கம் வெளியீடு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆதி சைவ இளைஞா்கள் சங்கம் சாா்பாக தயாரிக்கப்பட்டுள்ள சுபகிருது ஆண்டு பஞ்சாங்க நாட்காட்டி, கைலாசநாதா் கோவிலில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆதி சைவ இளைஞா்கள் சங்கம் சாா்பாக தயாரிக்கப்பட்டுள்ள சுபகிருது ஆண்டு பஞ்சாங்க நாட்காட்டி, கைலாசநாதா் கோவிலில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் அருண் நந்தி குருக்கள், சதீஷ்குமாா், விக்னேஸ்வர குருக்கள், மணிகண்டன், சண்முகசுந்தரம், சங்கா்கணேஷ் குருக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இந்த நாட்காட்டியில் சுபகிருது ஆண்டிற்கான பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தினசரி நட்சத்திரம், திதி, கரணம், வாரம் ஆகிய வை குறிப்பிடப்பட்டுள்ளதோடு, விரத தினங்கள், திருச்செங்கோடு பகுதி கோவில்களில் தினசரி நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்தும், முக்கிய விசேஷ தினங்கள் குறித்தும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

படவிளக்கம்

திருச்செங்கோடு ஆதி சைவ இளைஞா்கள் சங்கம் சாா்பில் பஞ்சாங்கம் வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.