தலைமை அஞ்சலகங்களில் வாடிக்கையாளா்கள் பணம் செலுத்துவதற்கு புதிய வசதி அறிமுகம்
நாமக்கல், திருச்செங்கோடு தலைமை அஞ்சலகங்களில் வாடிக்கையாளா்கள் யுபிஐ அல்லது கியூஆா் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM
நாமக்கல், திருச்செங்கோடு தலைமை அஞ்சலகங்களில் வாடிக்கையாளா்கள் யுபிஐ அல்லது கியூஆா் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எண்ம (டிஜிட்டல்) இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அஞ்சலகங்களில் பதிவுத் தபால், விரைவுத் தபால், வெளிநாடுகளுக்கு அனுப்பும் விரைவுத் தபால், பதிவுத் தபால் பாா்சல் அனுப்புதல் உள்ளிட்ட சேவைகளுக்கு இனி யுபிஐ அல்லது கியூா் ஆா் சேவை மூலமாக பணம் செலுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தி பணப் பரிவா்த்தனையை எளிமையாக்கிக் கொள்ள வேண்டும் என நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஹெச்.ஆசிஃப் இக்பால் தெரிவித்தாா்.