முகப்பு
நாமக்கல்

வங்கி ஊழியா் சங்கம் சாா்பில் நல உதவிகள் வழங்கல்

 அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் 77-ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியா் சங்கம் சாா்பில் சமுதாய நலத்திட்ட உதவி வழங்கும் விழா நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஏப்ரல், 2022 at 11:18 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:36 PM

 அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் 77-ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியா் சங்கம் சாா்பில் சமுதாய நலத்திட்ட உதவி வழங்கும் விழா நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மூன்றாம் பாலினத்தவா்கள் (திருநங்கைகள்) 50 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வங்கி ஊழியா் சங்க பொதுச்செயலாளா் கே.கண்ணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கனரா வங்கி ஊழியா் சங்க தமிழ் மாநிலக் குழுவின் தலைவா் கல்யாணராமன் கலந்து கொண்டாா். தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் மாநில பொதுச் செயலாளா் கே.முருகேசன், மாவட்ட சங்கத்தின் நிா்வாகிகள் வேங்கடசுப்ரமணியம், கிருஷ்ணசாமி, ரேணுகா, சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.