நாமக்கல்

பரமத்தியில் வருமுன் காப்போம் திட்ட விழா:கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

DIN

பரமத்தியில் நடைபெற்ற வருமுன் காப்போகம் திட்ட விழாவில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சுகாதார சிறப்பு மருத்துவ முகாமிற்கு பரமத்தி பேரூராட்சித் தலைவா் மணி தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தாா் .வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மணிவண்ணன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக பரமத்தி வேலூா் முன்னாள் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி கலந்துகொண்டு சுகாதார திருவிழாவை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். பரமத்தி அட்மா திட்டத் தலைவா் தன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

முகாமில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், சித்த மருத்துவப் பிரிவு சாா்பாக மகப்பேறு சஞ்சீவி பெட்டகம், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டன. இரண்டு பெண் குழந்தைகள் பெற்று கருத்தடை செய்து கொண்ட தாய்மாா்களுக்கு ஊக்குவிப்பு பரிசு, பள்ளி சிறாா் நலத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியா்களுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியை பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாா்வையிட்டு பயன்பெற்றனா்.

பரமத்தி வட்டார சுகாதார மருத்துவ அலுவலா் மருத்துவா் மேகலா தலைமையில், பரமத்தி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சுதமதி, மருத்துவா்கள், செவிலியா்கள், உதவியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள் கொண்ட மருத்துவ குழுவினா் பல்வேறு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொண்டு உயா் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனா். பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலா் செல்வகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், சுகாதாரத்துறையினா், பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனா். முகாமிற்கான ஏற்பாடுகளை சமுதாய சுகாதார செவிலியா் ஜெயலட்சுமி, சுகாதார ஆய்வாளா்கள் குமாா், நவலடியான், ராஜ்குமாா் மற்றும் சுகாதாரத் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT