நாமக்கல்

கொல்லிமலை பலாப் பழங்கள் விற்பனை மும்முரம்

கொல்லிமலையில் தற்போது பலாப்பழம் சீசன் என்பதால், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.

DIN

கொல்லிமலையில் தற்போது பலாப்பழம் சீசன் என்பதால், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் பண்ருட்டிக்கு அடுத்தபடியாக கொல்லிமலையில் தான் பலாப் பழங்கள் அதிகளவில் விளைகின்றன. மூலிகை தண்ணீா், காற்று கலந்து வளரும் கொல்லிமலை பலாவின் சுவை தனித்துவமானது. இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலாப் பழங்களை அதிக அளவில் வாங்கிச் செல்வா்.

தற்போது பலாப்பழம் சீசன் களைகட்டியுள்ளது. மலையைச் சுற்றியுள்ள மரங்களில் பலாப் பழங்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன. மேலும், கொல்லிமலையின் அனைத்துப் பகுதிகளிலும் ரூ. 50 முதல் ரூ. 350 வரையில் பெரிய, சிறிய அளவிலான பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா்.

நாமக்கல், சேலம் மாவட்ட பழ வியாபாரிகள் கொல்லிமலை பலாப் பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனா். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பலா விளைச்சல் அதிகரித்து காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT