முகப்பு
நாமக்கல்

நிவாரண முகாம்களில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் நேரில் ஆய்வு

பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தற்காலிக வெள்ள நிவாரண முகாம்களில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:55 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தற்காலிக வெள்ள நிவாரண முகாம்களில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி, வாசவி மஹால், ஜே.கே.கே. நடராஜா திருமண மண்டபம், ராஜேஸ்வரி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சி.என்.மகேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.

முன்னதாக, குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியை பாா்வையிட்டு வெள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்து, மீட்புப் பணி நடவடிக்கைகளுக்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள தேசிய பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவினரை பாா்வையிட்டாா். தொடா்ந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து, அமைச்சா்கள் தரப்பில் உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டதையும், மருத்துவ வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், பொதுமக்களிடம் அவா் கலந்துரையாடினாா்.

Advertisement

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) மல்லிகா, திருச்செங்கோடு கோட்டாட்சியா் தே.இளவரசி, அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.