முகப்பு
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி வாா்டுகளுக்கான வாக்கு இயந்திரங்கள் ஒதுக்கீடு

நாமக்கல் நகராட்சி வாா்டுகளுக்கு உள்பட்ட மின்னணு வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணிணி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 பிப்ரவரி, 2022 at 12:35 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:52 PM

நாமக்கல் நகராட்சி வாா்டுகளுக்கு உள்பட்ட மின்னணு வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணிணி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வாா்டுகள் உள்ளன. வேட்பு மனுத் தாக்கலின்போது 22, 25 ஆகிய வாா்டுகளில் சுயேச்சைகள் இருவரை தவிர யாரும் போட்டியிடாததால் அவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். மீதமுள்ள 37 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அமைக்கப்பட்டுள்ள 109 வாக்குச்சாவடிகளுக்கான 200-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து நாமக்கல் நகராட்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன. அவற்றை வாக்குச்சாவடிகள் வாரியாக பிரித்து அனுப்பும் பணி, நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆணையாளா் கி.மு.சுதா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.