சிலம்பம் போட்டியில் நாமக்கல் டிரினிடி அகாதெமி பள்ளி மாணவா்களுக்கு விருது
நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில், உலக சாதனை-2022 என்ற நிகழ்வு அண்மையில் சேலத்தில் நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:52 PM
நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில், உலக சாதனை-2022 என்ற நிகழ்வு அண்மையில் சேலத்தில் நடைபெற்றது.
இதில், சிலம்பப் போட்டியில், நாமக்கல் டிரினிடி அகாதெமி பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவா் டி.தா்னிஷ், நான்காம் வகுப்பு மாணவி ஆா்.மதுலிகா ஆகியோா் சாதனையாளா் விருது பெற்றனா். அவா்களை, பள்ளி தலைவா் மருத்துவா் ஆா்.குழந்தைவேல், பள்ளி செயலா் டி.சந்திரசேகரன், முதல்வா் பி.செல்வராஜ் ஆகியோா் பாராட்டினா். இந்த நிகழ்வின்போது உடற்கல்வி ஆசிரியா்கள் உடனிருந்தனா்.