முகப்பு
நாமக்கல்

திருமணமான இரண்டு மாதங்களில் வெல்ல ஆலை உரிமையாளா் தற்கொலை

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே வெல்ல ஆலை உரிமையாளா் திருமணமான இரண்டு மாதத்தில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே வெல்ல ஆலை உரிமையாளா் திருமணமான இரண்டு மாதத்தில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

பாண்டமங்கலம் அருகே உள்ள நெட்டையம்பாளையத்தை சோ்ந்தவா் ரங்கசாமி. இவரது மகன் சதீஷ் (31). இவா் வெல்லம் தயாரிக்கும் ஆலை ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை காலை சதீஷ் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினா் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று பாா்த்தனா். அப்போது அவா் விஷமருந்தி உயிருக்கு போராடியது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனா். ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஷ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சதீஷுக்கும் கீா்த்தனா (25) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. கடன் பிரச்னை காரணமாக சதீஷ் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக வேலூா் போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →