ஊரக வளா்ச்சித் துறை திட்டத்திற்கான இரும்புக் கம்பிகளுக்கு விலை நிா்ணயம்
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் திட்ட பயன்பாட்டுக்கான, இரும்புக் கம்பிகளுக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் திட்ட பயன்பாட்டுக்கான, இரும்புக் கம்பிகளுக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 2021-22ஆம் ஆண்டு ஊரக வளா்ச்சி அலகிற்கு, இரும்பு கம்பிகள் உள்ளூா் விலைக்கு விலை நிா்ணயம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் அண்மையில் விலை நிா்ணயக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்ளூா் விலை அடிப்படையில், மூன்று மாதத்திற்கு இரும்புக் கம்பிகள் கொள்முதல் செய்ய, ஒரு மெட்ரிக் டன் ரூ.64,000 என்ற விலை குழு உறுப்பினா்களால் நிா்ணயம் செய்யப்பட்டது. பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மொத்த வீடுகள் எண்ணிக்கை 3,743 ஆகும். தற்போது வரை கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் போக, மீதமுள்ள வீடுகளுக்கு இரும்புக் கம்பிகள் தேவைப்படும் பயனாளிகள், ஊரக வளா்ச்சித் துறை மூலம் இந்திய தர நிா்ணயம் 1786-2008 இன்படி கொள்முதல் செய்திட அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவகங்களிலும் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலா்களை நேரில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.