எதிர்க்கட்சித் தலைவர்களைவிட வளர்ப்பு நாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ராகுல்?
காங்கிரஸ் தலைவர்களைவிட, வளர்ப்பு நாய்க்கே ராகுல் முக்கியத்துவம் அளிப்பதாக சமூக ஊடகங்களில் விவாதம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதாக சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மக்களவையில் வெள்ளிக்கிழமையில் (ஏப். 17) தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள், எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.
முன்னதாக, மசோதா விவாதத்தின்போது, அவையில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று கடந்த புதன்கிழமையிலேயே (ஏப். 15) காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் ஆலோசிக்கப்பட்டது.
Advertisement
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸின் சரத்பவார், சுப்ரியா சுலே, சிவசேனையின் (உத்தவ்) சஞ்சய் ராவத், திமுகவின் டி.ஆர். பாலு, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், கபில் சிபல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, ராகுல் காந்தியின் வளர்ப்பு நாய் ’பிடி’யையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்றிருந்தாலும், அவரது முழு கவனமும் வீட்டின் வெளியே புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த பிடியின் மீதே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பிடியை உள்ளே அழைத்துவர ராகுல் முற்பட்டபோது, ஆலோசனைக் கூட்டத்தில் நாய் எதற்கு? என்று உள்ளிருந்த சிலர் கூறியவுடன், ராகுல் வெளியே சென்று நாயுடன் விளையாடியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராகுலின் இந்தச் செயல்பாடு, சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, முன்னரே ராகுல் காந்தி மற்றும் அவரது வளர்ப்பு பிடியையும் பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா விமர்சித்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர்களைவிட, வளர்ப்பு நாய்க்கே ராகுல் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், மீதமான பிஸ்கட்டுகளையே காங்கிரஸ் தலைவர்கள் சாப்பிட வேண்டியிருந்ததாகவும் கடுமையாக ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சித்திருந்தார்.